Monday, June 7, 2010

இறையாட்சி என்பது...

இறையாட்சி என்பது என்ன என்று, தானாக எழுதுவதை விட படித்தவைகள், போதிக்கப்பட்டவைகள், அனுபவங்களில் இருந்து எழுவதே சரியாக இருக்கும். 20 வருடங்களுக்கு மேல் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த அனுபவங்களின் ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை. அதற்க்காக எல்லாருக்கும் தெரிந்த விசயங்களை மட்டும் எழுத வில்லை.

2000 மாவது வருடத்தை திருச்சபை நற்கருணை ஆண்டாக அறிவித்தது. இந்த சிறப்பை முன்னிட்டு கோட்டாறு மறை மாவட்டம் பலவருடங்களாக வகுப்பு நடத்திக்கொண்டிருந்த 9 வகுப்பிற்கு மட்டும் அந்த வருடத்திலிருந்து நற்கருனையின்  
 சிறப்பாக புதிய புத்தகத்தை  அறிமுகப்படுத்தியது. இது நற்கருணையின் சிறப்பையும் அதன் உண்மையான அர்த்தம் என்ன என்ன்பதையும்  விளக்குவதாகவும் அமைந்தது.

இறையாட்சி என்பது விண்ணில் மட்டும் இருக்கவேண்டிய வாழ்க்கையல்ல. மண்ணில் நாம் வாழ்ந்து காட்டவேண்டியதும்  கூட, மண்ணுலகமும் படைக்கும் போதே இறையாட்சியின் நோக்கமாகவே படைக்கப்பட்டது. ஆனால் அலகையின் துணைகொண்டு, முதல் மனிதன் முதல் ஒவ்வொரு மனிதனும் அதை மீறுவதே நோக்கமாக கொண்டு செயல் பட்டு வருகிறான், வருகிறோம்.

இறையாட்சி என்றால் எப்படி?
இந்த உலகத்தை போல அல்லாமல், அங்கு இறைவனின் விருப்பம் படியே அனைத்தும் இருக்கும். இறையாட்சியில் சந்தோசம் இருக்கும், துக்கம் இருக்காது, கவலை இருக்காது, அழுகை இருக்காது. சமத்துவம் இருக்கும், ஏற்றத்தாழ்வு இருக்காது, பாகுபாடு இருக்காது, மொத்தத்தில் பாசிட்டிவான நிகழ்வுகள் மட்டுமே இருக்கும், இயேசுவின் போதனைகள் அனைத்துமே இறையாட்சிக்கானது. இயேசுவின் பல உவமைகளும், போதனைகளும்  இறையாட்சியின் முக்கியத்துவத்தையே உணர்த்துகின்றன, இதற்காகவே அவர் வாழ்ந்தார், உயிரை கொடுத்தார் நற்கருணையை ஏற்படுத்தினார்

திருப்பலியை நாம் மீண்டும் மீண்டும் நிறைவேற்றி வருகின்றோம்,அதாவது இயேசு செய்த உடன்படிக்கையை புதுபித்துக்கொண்டு வருகிறோம், தனது உடலையும் இரத்த்ததையும் கொடுத்த அந்த விருந்தில் பங்கு கொள்கிறோம் இது தான் நற்கருணை

நற்கருணை விருந்தில் பங்கு கொள்பது என்பது இயேசுவின் கொள்கைகளில் உடன்பாடு கொண்டவர்கள் மட்டுமே பங்கு பெறுவது, அதாவது அவரது போதனையை ஏற்று கொள்வது, அவர் விரும்பிய ஆட்சியை நிலை நிறுத்த உறுதி ஏற்பது என்பதே உடன்பாடு. இயேசுவின் காலத்திற்கு பின் ஆதி கால கிறிஸ்த்தவர்கள் இந்த உடன்பாட்டின் படியே வாழ்ந்து வந்தார்கள், அவர்கள் ஒரு  இடத்தில்  கூடுவார்கள், தங்களிடம் இருப்பதை பங்கிட்டு கொள்வார்கள், ஒருவருக்கொருவர் அன்புடனும் தோழமையுடனும் பழகி வந்தார்கள், ஆனால் காலப்போக்கில் மக்களின் வசதிக்கேற்ப பெரிய வசதியான ஆலயம் எழுப்பப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன.. பக்கத்தில் இருப்பவர்கள் யார் என்று கூட  தெரியாமல் நாம் நம் திருப்பலி கடமையை ஆற்றி வருகிறோம்..

பல நூற்றண்டுகளுக்கு முன்னால் திருச்சபையில் மிகப்பெரிய விவாதம் நடை பெற்றது. அது நற்கருணையில் உண்மையிலே இயேசு இருகிராறாரா? அல்லது அது ஒரு அடையாள பிரசன்னமா என்று? அப்போது நற்கருணையில் இயேசு இருப்பது என்பது ஒரு அடையாளப் பிரசன்னம்  என்று வாதிட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர், திருச்சபையில் இருந்து நீக்கவும் செய்தனர். மக்கள் அந்த தரிசனத்திற்காக 20 வருடங்களுக்கு முன், ஒரு கோவிலில் திருப்பலி முடிந்த பின் அடுத்த கோவில் என்று நடையாக நடந்து பங்கு பெற்றனர். இவைகளால் நற்கருணை அழகிய பேழைகளில் வைக்கப்பட்டன, தரிசனம் வேண்டி மக்கள் வழிபட சகொதர உறவுகள், தோழமைகள் பின் தள்ளப்பட்டன.. இந்நிலையில் முக்கியமான எழுந்தேர்ரம் முடிந்த பின்னர் "இது விசுவாசத்தின் மறைபொருள்" என்ற வார்த்தை ஒரு திருத்தந்தையால் புகுத்தப்பட்டது.. மக்களை  மேலும்  இரகசியத்தை தேடும் அளவுக்கு ஆக்கியது.. ஆனால் ஆதிகால திருப்பலியும்    அதன் நோக்கமும் முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது

இப்போது உள்ள முறைகள் எல்லாம் காலத்திற் கேற்றபடி மாற்றப்பட்டவை, ஆதி கிறிஸ்த்தவர்களை போல தங்களிடம் உள்ளவற்றை பங்கிடுவது என்பது இந்த காலத்தில் யாருக்கும் இயலாத ஒன்று, அன்பியங்கள் ஓரளவுக்கு ஆதி கிறிஸ்த்தவர்களின் வாழ்கையை  எடுத்துகாடுகிறது, மற்றபடி இறையரசை பலப்படுத்த கையளிப்பது... Not completed..