Wednesday, September 9, 2009

இன்ஜினியரிங் மேற்படிப்பு கவுன்சிலிங்கிலிருந்து சில தகவல்கள் :
அண்மையில் நடைபெற்ற இன்ஜினியரிங் மேற்படிப்பு கவுன்சிலிங்கில் இடவொதுக்கீடு மூலம் சிலருக்கு பயனிருந்தாலும் சிலருக்கு பாதகமாக இருந்தது. குறைவான மதிபெண்களுடன் பல B.C. வகுப்பினர் கூலாக எந்த வித பதட்டமும் இல்லாமல் சிறந்த கல்லூரிகளில் இடங்களை பெற, அவர்களுடன் ஒரே வகுப்பில் படித்து முதல் மதிப்பெண்கள் பெற்ற O.C. வகுப்பினர் சிலர் கூட விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தங்கள் சமூக விதியை எண்ணி வருந்தியபடி சென்றனர்.
இந்த கவுன்சிலிங்கில் கல்லூரி மதிப்பெண் பட்டியலை கணக்கில் கொள்ளாமல் நுழைவு தேர்வு ஒன்றை மட்டும் அடிப்படையாக கொண்டு எப்படி இடம் ஒதுக்கீடு செய்யலாம்? படித்து தேர்வு எழுதியவர்களுக்கும், படிக்காமல் சும்மா ஏதாவது ஒரு விடையை தேர்வு செய்து எழுதிய மாணவர்களுக்கும் மதிப்பெண் வித்தியாசங்கள் மிகப்பெரிய அளவில் இல்லாத பொது, கல்லூரி மதிப்பெண் பட்டியலை சேர்க்காமல் நுழைவு தேர்வு மதிப்பெண்கள் மூலமும் ஜாதி வாரியான இடவொதுக்கீடு மூலமும் கல்லூரிகளில் இடங்களை வழங்கியது நல்ல மதிப்பெண்கள் பெரும் மாணர்கள் தகுந்த வாய்ப்புகளை இழந்தனர்.
ஜாதிகளை ஒழிக்கவேண்டும் என்று கூறிகொண்டே இப்படி ஜாதிகள் மூலம் இடம் அழிப்பது சரியா? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியார் : "தனி ஒருவனுக்கு உணவில்லைஎன்றால் இந்த ஜெகத்தினை அழித்திட வேண்டும்" என்றார். இது எல்லோருக்கும் பொருந்தாதா? சில பிரிவினர் இன்ஜினியரிங் (B.E) சேரும் போதும் சலுகை பெற்று, மறுபடி இன்ஜினியரிங் மேற்படிப்பு (M.E) சேரும் போதும் வரிசையா சலுகைகளை அனுபவிப்பதும், மற்ற ஜாதியினர் வரசையாக இழப்புக்களை அனுபவிப்பதும் சரியாக இருக்குமா?
கல்லூரியில் முதல் நுழைவு வாயிலுக்கு மட்டும் [இன்ஜினியரிங் (B.E) சேரும் பொது] இந்த கூடுதல் வாய்ப்பை கொடுத்து, மற்ற எல்லா மேற்படி வாய்ப்புக்களையும் மெரிட் என்ற திறமைக்கு கொடுத்தால் கல்வியின் தரமும் உயரும். அனைவருக்கும் சம வாய்ப்புக்களும் கிடைக்கும். ஆனால் இங்கு அசட்டையாக வந்து இடாங்களை பெற்றுசெல்லும் வசதியை தான் அரசும், பலகலை கழகங்களும் செய்து கொடுத்திருக்கின்றன.

பழங்குடியினர், காணி இனம் போன்ற சில மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கும், பொருளாதார நிலையில் கீழ் நிலையில் இருப்பவர்களுக்கும் ஒதுக்கீடுகள் கொடுக்கலாம் தவறில்லை. ஆனால் பின்தங்கிய வகுப்பு, மிகவும் பின்தங்கிய வகுப்பு என்று கூறப்படும் சில வகுப்புக்களில் வசதி இருப்பவர்கள் மட்டுமே மேற்படிப்பிற்காக வருவார்கள். இவர்கள் தான் பதட்டமில்லாமல் இடங்களை பெற்று செல்லும் நிலை காணப்படுகிறது.

வருடா வருடம், தேவைக்கேற்ப கல்லூரிகளில் மொத்த இடங்கை அதிகரிப்பது அல்லது இட ஒதுக்கீடு சத வீதங்களை நிலைக்கேற்ப மாறுதல் செய்து கொண்டே இருப்பது தான் சிறந்த தீர்வாக இருக்கும்.
DYNAMIC ALTERATION NEEDED FOR EVERY YEAR

Saturday, September 5, 2009

Jesus the Bread of Life

I am the living bread that came down from heaven. If you eat this bread, you will live forever.

The bread that I will give you is my flesh. For my flesh is the real food; my blood is the real drink. Those who eat my flesh will never be hungry and who drink my blood will never be thirsty.

Do not work for food that spoils [goes bad]; instead, work for the food that lasts for eternal life.